குறிக்கோள்

இறையைப் பற்றி, ஆன்மிகத்தைப் பற்றி சொல்லவேண்டிய எல்லாவற்றையும் நமக்கு முன்னே புகழொடு தோன்றி வாழ்ந்து, இறையொடு ஒன்றிய நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், ஏனைய அருளாளர்களும் உணர்ந்து, கசிந்து பாடிப் பரவிச் சென்று விட்டார்கள். இனிப் புதிதாகச் சாற்ற வேண்டியது ஏதேனும் உண்டோ? தமிழரின் வாழ்வும் வாக்கும், பக்தியும் ஆன்மீகமுமாய் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்த பெருநெறியாய் விளங்கி வந்திருப்பது கண்கூடு. நாத்தீகம் பேசி நாத்தழும்பேறியவராலும் மறுக்க முடியாத உண்மை. இறையைப் பற்றிப் “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்ற திருநாவுக்கரசரின் அறிவுரையை சிரமேற்கொண்டு நாமும் பேசுவோம்..... எதைப் பற்றி? நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், அருணகிரியாரும், பட்டினத்துப் பிள்ளையும், தாயுமானவரும், இராமலிங்க வள்ளலாரும், ஏனைய மத அருளாளர்களும், மெய் நெறியாளர்களும் உணர்ந்து, துய்த்து, பாடிப் பரவிய பரம் பொருளை, இறையை, இறையருளை ஏத்திப் போற்றிப் பாடிய பாடல்களை செந்நெறியாளர்களின் வாயிலாகக் கேட்போம், தெரிந்து தெளிவோம், சிந்திப்போம், சிந்தித்துப் பேசுவோம்.

Monday, February 25, 2013

blog.thiruneri.cs - Yahoo! Search Results

blog.thiruneri.cs - Yahoo! Search Results

No comments:

Post a Comment